எஸ்பி பாலாஜி சரவணன் தபால் ஓட்டு பதிவு!

67பார்த்தது
நாடாளுமன்ற மன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையிருக்கான தபால் ஓட்டு வாக்குபதிவு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது இதில் இரண்டாவது நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிபபாளர் பாலாஜி சரவணன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என ஏராளமான காவல்துறை சேர்ந்தவர்கள் தங்களது தபால் வாக்குகளை செலித்தி வருகின்றனர்.

காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்கள் தேர்தல் நாளில் பணியில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் முன்கூட்டியே ஓட்டுக்கள் போடுவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த 85 -பேர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 660- பேர் என மொத்தம் 745- காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி