உலக நன்மை வேண்டி நடைபெற்ற பூக்குழி நிகழ்ச்சி

67பார்த்தது
உலக நன்மை வேண்டி நடைபெற்ற பூக்குழி நிகழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற பூக்குழி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி சுமந்த படியும் அழகு குத்திய படியும் பூக்குழி இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர்.


ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திரிசுதந்திரர்கள் சார்பில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பூமிதி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திரிசுதந்திரர்கள் சார்பில் உலக நன்மை வேண்டியும், பருவமழை தவறாமல் பெய்ய வேண்டியும், வேண்டுதல் நடத்தினர்.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வேல்குத்தியும், காவடி சுமந்த படியும், பால்குடம், எடுத்து சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 ரத வீதிகளிலும் சுற்றி வேல்,. வேல்,. என்ற கோசத்துடன் பக்தி பரவசமாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பூ குண்டத்தில் காவடி சுமந்த படியும் அழகு குத்திய படியும் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்.

தொடர்புடைய செய்தி