பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் நடவடிக்கை:

592பார்த்தது
பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் நடவடிக்கை:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மற்றும் ஆலோசனை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மூலம் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றுபடுகைகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீரேற்று நிலையங்கள் முறப்பநாடு, பொன்னங்குறிச்சி, மங்கலக்குறிச்சி, ஏரல், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் மிகுந்த சேதம் அடைந்த சூழலில் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்திட மாநகரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தனியார் குடிநீர் ஏற்று நிலையங்கள் உட்பட சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நீரேற்று நிலைய குழுவினருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி 20 நோட்டிஸ்கள் வழங்கி லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரையும் குளோரினேசன் செய்து முறையாக பாதுகாப்பாக பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி