நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, "நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எந்த பரிந்துரையும் அரசிடம் இல்லை" என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. மேலும், "கல்வி சுரண்டல், கல்வியை லாபகரமாகப் பார்க்கும் முறை மற்றும் வணிகமயமாக்கலை தடுக்கவே நீட் தேர்வு அமல் படுத்தப்பட்டது" எனவும் விளக்கமளித்துள்ளது.