தேர்தல் பறக்கும் படை சோதனை: ஆட்சியர் ஆய்வு

556பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக முறையாக வாகன சோதனை செய்கின்றனர் என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஆய்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 56 பறக்கும் படைகள் மற்றும் 56 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பண பரிமாற்றத்தை தடுக்க பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் முழுவதும் இதுவரை வாகன சோதனையில் முறையாக ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சுமார் 44 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



இந்நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வாகன சோதனையை தீவிர படுத்த உத்தரவிட்டுள்ளார் இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முக்காணி மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரிடம் வாகன சோதனை குறித்து ஆய்வு செய்தார் மேலும் வாகன சோதனையை தீவிர படுத்தவும் உத்தரவிட்டார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி