விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குனர் ஹரி பேட்டி!

1073பார்த்தது
தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி செய்தியாளரிடம் பேசினார். அப்போது நடிகர் விஜய் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களுக்கு நல்லது செய்தால் சந்தோசம் தானே என்றார். மேலும் தனது படங்களின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கும் எண்ணமில்லை என்று கூறிய அவர் விரைவில் போலீஸ் கதை அம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படம் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஓடிடி இணையதளங்களில் படங்கள் வெளியாவதால் சினிமாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. திரையரங்குகள் தற்போது நல்ல நிலையில் உள்ளதால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து பார்ப்பது எண்ணிக்கை கூடியுள்ளது. ஓடிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் சினிமாவிற்கு கூடுதல் பலம் என்றார்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்திற்கு 20 ஆண்டுகளுக்கு பின்பு திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் வந்து உற்சாகமாக பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்தி