பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

62பார்த்தது
தூத்துக்குடி; முக்குலத்தோர் சமுதாயத்தை ஒன்றிணைத்து தேவரினம் என்ற அரசாணையை தமிழக அரசு அமுல்படுத்த கோரி பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கள்ளர் மறவர் அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்று ஒரே பெயராக அழைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டு 1995 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அரசாணை இதுவரை முறையாக அமல்படுத்தப்படாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இதன் காரணமாக தேவர் சமுதாய இளைஞர்கள் மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே தமிழக அரசு முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்று அழைக்கும் அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி