உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு காரசேரி ஊராட்சியில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் ஒழுங்குமுறை கூடத்தினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், பார்வையிட்டார். பின்னர் அவர் கீழச்செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு அங்கு வரும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், கீழச்செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நலவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் பார்வையிட்டார். தொடர்ந்து செக்காரக்குடி ஊராட்சி, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாய தோட்டத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளதையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் பார்வையிட்டார்.