அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்!

61பார்த்தது
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்., 14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இது ஜூன் 14 வரையில் 61 நாட்கள் அமலில் இருக்கும். கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் அமலுக்கு வந்தது. தடையை மீறி மீன் பிடிக்க செல்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி