கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; டாக்டர் ஷ்யாம் குற்றச்சாட்டு

55பார்த்தது
கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; டாக்டர் ஷ்யாம் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடந்த மாதம் 23ஆம் தேதி செண்பகப்பேரி‌ கிராமத்தில் பாண்டியராஜன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி இ. எஸ். ஐ. மருந்தகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஷ்யாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் "செண்பகப்பேரியில் கடந்த 23ந்தேதி பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கடந்த சில ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல இளைஞர்கள், எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஜாதி வெறி கொண்ட கும்பலால் கூலிப் படைகளை வைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்தும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எவ்வித காரணமும் இல்லாமல் தேவேந்திர குலத்தினரை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொலைகள் நடைபெற்று வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் குறைவாக வாழும் இடங்களில் உள்ள மெஜாரிட்டியாக உள்ள மாற்று சமுதாயத்தினர், தேவேந்திரகுல வேளாளர் மக்களை அச்சுறுத்தி, அவர்களை ஊரை விட்டு காலி செய்ய வைத்து, அவர்கள் நிலங்களை அபகரிக்கும் நோக்கில் ஒரு கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. என்றார்.

தொடர்புடைய செய்தி