பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவக்கம்: மாணவர்கள் உற்சாகம்!

65பார்த்தது
தூத்துக்குடி இறுதி ஆண்டு தேர்வு முடிவுற்ற நிலையில் இன்று பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவக்கம் மாணவர்கள் உற்சாகம் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க உள்ளதாக தகவல்


தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வு முடிவுற்று கோடை விடுமுறை துவங்கியுள்ளது இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பள்ளிகளில் இறுதி தேர்வு எழுதிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர் பள்ளி இன்னும் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் மாதம் தான் திறக்க உள்ளது அதுவரை தாங்கள் தங்கள் நண்பர்களை சந்திக்க முடியாதது வருத்தம் அளிப்பதாகவும் மேலும் இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் பல்வேறு பயிற்சி முகாம்களுக்கு மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விடுமுறையை உற்சாகமாக கழிக்க உள்ளதாக தெரிவித்தனர்

மேலும் இந்த விடுமுறை காலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி