மன்னார்குடி - Mannargudi

மது போதையில் ஒருவர் அடித்துக் கொலை

மன்னார்குடியை சேர்ந்த ஜெயநாராயணன் ஈரோட்டில் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான மன்னார்குடிக்கு வந்துள்ளார். ஜெயநாராயணன். நேற்று (ஆக.,31) இரவு அப்பகுதியில் உள்ள கடையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பீர் முகமது வயது, நம்பிராஜன், ஆகியோரும் கடையில் மது போதையில் இட்லி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பீர் முகமது ஜெய நாராயணனை சாப்பிடும் பொழுது தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த ஜெய நாராயணன் பீர்முகம்மதை தாக்கியுள்ளார். இதனால் ஜெயநாராயணனுக்கும் பீர்முகமது மற்றும் அவரது நண்பர் நம்பிராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் மூன்று பேரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு நடந்து சென்ற ஜெயநாராயணனை பீர்முகமது நம்பிராஜன் ஆகியோர் சேர்ந்து செங்கல் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயநாராயணன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இன்று (செப்.,1) காலை சிகிச்சை பலனின்றி ஜெய நாராயணன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பீர்முகமது நம்பிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


திருவாரூர்