மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நெல் கிடங்கை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றினார். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் சுமார் 33 ஆயிரம் டன் நெல் மணிகள் அதிநவீன முறையில் சேமித்து வைக்க ஏதுவாக மேற்கூரையுடன் கூடிய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.