

மன்னார்குடியில் மாலை நேரத்தில் திடீர் மழை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த சில தினங்களாக சற்று வெயில் அதிகரித்த நிலையில் இன்று (ஜூன் 13) காலையும் வெயில் அடித்தது. மாலை 6:30 மணி முதல் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சிறிது நேரம் மழை பெய்ததால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வடிந்தது. இந்த மழையால் மன்னார்குடி நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.