மன்னார்குடி புனித அந்தோனியார் ஆலய 237 வது தேர் பவானி கோளாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோனியார் கோவில் தெருவில் உள்ள அந்தோனியார் ஆலய 237வது ஆண்டு விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் ஜபா மாலை வழிபாடு நடைபெற்ற நிலையில் நேற்று இரவு தேர் பவானி நடைபெற்றது. கண் கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற விழாவில் புனித அந்தோனியார், சம்மன்ஸ், ஜபஸ்த்தியர், லூர்த்து மாதா, வனத்த சின்னப்பர் உள்ளிட்ட சொருபங்கள் மின் விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட தேரில் எழுந்தாருளி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் வான தூதர், தேவதைகள் மலர் மாலைகளை புனித அந்தோனியார், லூரது மாதா உள்ளிட்ட சுவாமிகளுக்கு அணிவிக்கும் நிகழ்வு தத்ரூபமாக நடைபெற்றது. மன்னார்குடியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பவனியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஹிந்துக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.