மன்னார்குடி - Mannargudi

வெள்ளையன் மறைவிற்கு பி.ஆர். பாண்டியன் இரங்கல்

வெள்ளையன் மறைவிற்கு பி.ஆர். பாண்டியன் இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெள்ளையன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. வணிகர்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றி குரல் கொடுத்தவர், போராடியவர். விவசாயிகளுக்கான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். குறிப்பாக காவிரி நதிநீர் பிரச்சினை, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது, முல்லைப் பெரியாறு உரிமைக்கான மகத்தான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். எ தனையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். எடுத்த பிரச்சனை தீர்வு காணும் வரையிலும் ஓய்வின்றி உழைப்பவர். சக்கரம் போல் சுழன்று தமிழ்நாடு முழுமையும் வணிகர்களுக்காக குரல் கொடுத்தவர். அவரது மறைவு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும் என குறிப்பிட்டிருந்தார்.

வீடியோஸ்


திருவாரூர்