வலங்கைமான் அருகே கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

569பார்த்தது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே நார்த்தங்குடி பகுதியில் இரவு நேரத்தில். பூதங்குடி பகுதியைச் சார்ந்த மணிகண்டன், சத்யராஜ், கோபி ஆகிய மூவரும் (பல்சர்) இருசக்கர வாகனத்தில், திருவாரூர் தஞ்சாவூர் சாலையில் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது நார்த்தங்குடி என்ற பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சத்யராஜ், கோபி, ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

அவர்களின் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், படுகாயமடைத்த மணிகண்டன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி