ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய படிப்பகம் கட்டடம் பூமி பூஜை

78பார்த்தது
பூந்தமல்லி நீதிமன்றத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய படிப்பகம் கட்டடம் பூமி பூஜை


சட்ட புத்தகங்களை வைத்து பூமி பூஜை செய்த வழக்கறிஞர்கள்


பூந்தமல்லியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் படிப்பகம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து பூந்தமல்லி எம். எல். ஏ. கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய படிப்பக கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை பண்ணி நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது இதில் பூந்தமல்லி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊதிய படிப்பகம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார் உடன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க வக்கீல்கள் கலந்து கொண்டனர் முன்னதாக சட்ட புத்தகங்களை வைத்து பூமி பூஜையை வழக்கறிஞர்கள் செய்தனர். விரைந்து பணிகளை முடித்து வக்கீல் பயிற்சி முடித்து வருபவர்கள் தங்கள் சட்ட நுணுக்கங்கள் சார்ந்த புத்தகங்களை இந்த படிப்பகத்தில் படித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் பூந்தமல்லி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தாமஸ்பர்னபாஸ், ரஞ்சித், ஏகாம்பரம், கவுதமன்கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி