காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

52பார்த்தது
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 122, வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக
திருவள்ளூரில் அமைந்துள்ள கல்வித்தந்தை பெருந்தலைவர்
கர்மவீரர் காமராஜர் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும்
அதனைத் தொடர்ந்து
பெரியகுப்பம், இரயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஜோஷி பிரேம் ஆனந்த்,
தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்: மாநிலச் செயலாளர் அஸ்வின் குமார், மாவட்ட மூத்த துணைத் தலைவர் தளபதி மூர்த்தி, மாவட்ட பொருளாளர் மணவாளன், மாவட்டத் துணைத் தலைவர் இ கே ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் மாயாண்டி, மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, நகரத் துணைத் தலைவர் பார்த்தசாரதி, நகரப் பொருளாளர் பிரவீன், நகர பொதுச்செயலாளர் பாபி, நகரச் செயலாளர் ஹசன் பாஷா, விஜய், சபீர், ஏ கே அப்துல் ஹமீது, வார்டு தலைவர் அன்பு, அர்னால்டு மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

தொடர்புடைய செய்தி