"பிரதமர் அவர்களே... மக்களின் குரல் எட்டுகின்றதா?"

77பார்த்தது
"பிரதமர் அவர்களே... மக்களின் குரல் எட்டுகின்றதா?"
பிரதமர் அவர்களே... மக்களின் குரல் எட்டுகின்றதா? என்று திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் ரயில் விபத்துகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பிரதமர் மோடி அவர்களே ரயில் விபத்துகள் அன்றாட நிகழ்வாகிவிட்டது என்ற மக்களின் குரல் எட்டுகின்றதா உங்கள் காதுகளில்? 2023-24 ஆண்டில் மொத்தம் 40 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் 313 பயணிகளும், 4 ரயில்வே பணியாளர்களும் மரணமடைந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி