பாஸ்போர்ட், விசா அல்லது செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும், விசா காலம் முடிந்த பிறகு சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.