உடல் உறுப்புகள் தானம் மலர் வளையம் வைத்து அஞ்சலி

65பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டைச் சேர்ந்தவர் சிவகுமார்(27) ஆட்டோ ஓட்டுநர். இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருவலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்கி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு கோமா நிலைக்குச் சென்ற அவர் மூளை சாவு ஏற்பட்டதால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தாய் கோவிந்தம்மாள் உள்ளிட்ட உறவினர்கள் ஒப்புதல் அளித்ததின் பேரில் சிவகுமாரின் உடலில் இருந்து சிறுநீரகம் நுரையீரல் இருதயம் உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களை மாற்று உறுப்பு கேட்டு விண்ணப்பத்துள்ள நோயாளிகளுக்கு பொருத்தும் விதமாக மருத்துவர்கள் குழு பத்திரமாக எடுத்துக் கொண்டனர்

இறந்த சிவகுமாரின் உடலை கிராமத்திற்கு கொண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர் உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் உடலுக்கு இறுதி மரியாதையை திருத்தணி கோட்டாட்சியர் தீபா வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மூத்த மகனின் உடலை தானம் வழங்கிய கோவிந்தம்மாளுக்கு ஆறுதல் கூறினர்

தொடர்புடைய செய்தி