திருத்தணி எம்எல்ஏ வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

3305பார்த்தது
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட சிவா டா, நெமிலி, தாழவேடு ஆகிய பகுதிகளில் திருத்தணி எம்எல்ஏ எஸ். சந்திரன் திறந்தவேனில் வீதி வீதியாக சென்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு வாக்காளர்களிடம் சொல்லி வாக்கு சேகரித்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி