மக்களவை தேர்தல் வாக்குப்பதிவினை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நாளன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய 2 நாட்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17,18 ஆகிய தேதிகளிலும் புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுவை பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.