முருகப்பெருமானுக்கும் தெய்வயானை தாயாருக்கும் திருக்கல்யாணம்

1534பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் என்று மலைக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் மண்டபத்தை வந்தடைந்தார். உற்சவர் முருகப்பெருமானுக்கு தெய்வயானை தாயாருக்கு வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் இனிதாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு எதுவும் வழங்காததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி