ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரணை நடந்த வலியுறுத்தி திருத்தணியில் தலித் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

பி எஸ் பி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலித் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக, புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் மக்கள் முன்னணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக திருத்தணி சித்தூர் சாலை சந்திப்பு பகுதியில் பேரணி தொடங்கி பின்னர் கமலா திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. இதில்1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கமலா திரையரங்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலித் கூட்டமைப்பு தலைவர்கள் பி எஸ் பி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி