திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் மோகன்(33). இவர் திருத்தணி - வேலூர் வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருத்தணி அருகே கே. ஜி. கண்டிகையை சேர்ந்த ஒருவர் திருப்பதியில் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அவரது மனைவி மற்றும் 10ம் வகுப்பு படித்து வரும் (16 வயது) மகளுடன் அடிக்கடி திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்கு திருத்தணியிலிருந்து வேலூர் செல்லும் தனியார் பேருந்தில் சென்று வருவது வழக்கம். அப்போது டிராக்டர் டிரைவருக்கும் பேருந்து ஓட்டுநர் மோகனுடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனை அடுத்து டிராக்டர் டிரைவருக்குசொந்தமான காரில் வெளியூர் சென்று வரும் போது தனியார் பேருந்து ஓட்டுநர் மோகன் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கே. ஜி. கண்டிகை வீட்டிலிருந்த 16 வயது பள்ளி மாணவியிடம் டிரைவர் மோகன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலர் டிரைவர் மோகனை போக்சோ தடுப்பு சட்டத்தில் இன்று கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.