அரசு பேருந்து நிலைய பணிமனை திறந்து வைத்த அமைச்சர்கள்

55பார்த்தது
பூந்தமல்லி அருகே கோவூர் பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் அரசு பேருந்து நிலைய பணிமனை திறப்பு மற்றும் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கும் விழா கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் தா. மோ. அன்பரசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேருந்து நிலைய பணிமனையை தொடங்கி வைத்து புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் புதிய அரசு பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். இதையடுத்து அங்கிருந்து பெண் ஒருவர் ரக்சா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறை அமைச்சர் சிவசங்கருக்கு கட்ட வந்தபோது தனக்கு காலையிலேயே கையில் கட்டி விட்டதாகவும் அமைச்சர் அன்பரசனுக்கு கட்டி விடுங்கள் என கூறிய நிலையில் அந்த பெண் அமைச்சர் அன்பரசன் கையில் ராக்கி கயிறு கட்டினார். இதையடுத்து அரசு பேருந்தில் அமைச்சர்கள் பயணம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி