மழலையர் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா.

63பார்த்தது
மழலையர் தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையர்  பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின் தலைமையாசிரியை பிரேமா அனைவரையும் வரவேற்றார்.
குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் சார்பில் நடராஜன் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கௌரவப்படுத்தினார்.
மேலும்,   பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். இறுதியில் ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி