சிறுவாபுரி திருக்கோயிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

80பார்த்தது
சிறுவாபுரி திருக்கோயிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்ரமணியம் முருகன் கோயிலில் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காகவும் மேலும் பக்தர்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் குறிப்பாக போக்குவரத்தை சரி செய்து பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகவும் பக்தர்கள் தங்குவதற்கான இடம் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கான இடம் அடிப்படைத் தேவைகளான குடிநீர் கழிவறை உள்ளிட்ட அனைத்து தேவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து அதன்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
தேவைப்பட்டால் தனியார் நிலங்களை வாங்குவதற்கும் மினி பேருந்துகளை இயக்குவதற்கும் கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி