எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க சென்ற இளைஞர் பலி

2249பார்த்தது
எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க சென்ற இளைஞர் பலி
எண்ணூர் பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற 18 வயது இளைஞர் ராட்சத அலைகள் சிக்கி பலி.

எண்ணூர் நேதாஜி நகரில் ஜெகநாதன் எழிலரசி தம்பதியர் சாலையோரம் டிபன் கடை நடத்தி வரும் நிலையில் இவர்களது மகன் பரத், 18 வயது. பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு டிபன் கடையில் தாய்க்கு உதவியாக இருந்த நிலையில் நேற்று எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கியவரை அங்கு உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரது உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் குளிக்கக் கூடாது ஆபத்தான பகுதி என்று அறிவிப்பு பலகைகள் வைத்து இருந்தும் இதுபோன்று நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்து உயிரிழக்கும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி