துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

561பார்த்தது
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய பாதுகாப்படை போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் புழல் சரக காவல் உதவி ஆணையர் சகாதேவன் மற்றும் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் புழல் காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மற்றும் மத்திய பாதுகாப்படை போலீசார் உடன் புழல் சுற்றுவட்டார பகுதிகளான மாதவரம் கொளத்தூர் ரெட்டேரி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளிலும் பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் குடியிருப்பு பகுதிகள் ஆகிய முக்கிய சாலைகள் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீஸாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி