நான் எதுவும் அனுப்பவில்லை.. அமீர் மறுப்பு

83பார்த்தது
நான் எதுவும் அனுப்பவில்லை.. அமீர் மறுப்பு
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அனுப்பியுள்ள சம்மன் குறித்து ஒரு ஆடியோ வெளியிட்ட அமீர், விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அமீர் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு விசாரணைக்கு அழைக்குமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் அமீர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டது. அதுகுறித்து விளக்கமளித்துள்ள அமீர், கால அவகாசம் கேட்ட தகவலை அமீர் மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தான் மின்னஞ்சல் ஏதும் அனுப்பவில்லை என்றும் அவர்கள் ஆஜராக சொன்னது போல் நாளை டெல்லியில் ஆஜராகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி