நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த கவுன்சிலர்

68பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 3வது வார்டுக்கு உட்பட்ட பாலபாக்யா நகர் மற்றும் மணிமூர்த்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் சிறிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் வழங்கினார். இதில் பொதுமக்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி