நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரை சேர்ந்த சுரேஷ் தனது அண்ணன் கணேசனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறை தடுக்க முயன்ற சுரேஷின் மனைவி ஜெயாவை கடந்த 2020ல் கணவன் சுரேஷ் மண்னெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். இவ்வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நீதிபதி பன்னீர்செல்வம் கொலையாளி சுரேஷிற்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.