மாநகர பகுதியில் வலம் வந்த மலைப்பாம்பு

10270பார்த்தது
திருநெல்வேலி மாநகர வண்ணாரப்பேட்டையில் இன்று (மார்ச் 15) காலை 5 அடி நீளமுள்ள மலை பாம்பு ரோட்டில் ஊர்ந்து சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவமாக பிடித்து காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி