கூண்டுக்குள் செல்லாமல் போக்கு காட்டும் சிறுத்தை

1069பார்த்தது
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் பகுதிகளில் கடந்த மாதம் புகுந்த 4 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் அனவன்குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அங்கு கூண்டு வைத்து வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். அந்த கூண்டின் ஒரு பகுதியில் ஆட்டை கட்டி வைத்து கண்காணிக்கின்றனர். சம்பவத்தன்று இரவில் அந்த கூண்டின் அருகில் சென்ற சிறுத்தை கூண்டுக்குள் செல்லாமல் போக்கு காட்டியவாறு திரும்பி சென்றது. இதன் புகைப்படங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்தி