சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை முன்னிட்டு பாளையங்கோட்டையில் சிலைக்கு பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் யாதவ சமுதாய இளைஞர்களும் பைக் கார்களில் ஆரன் அடித்தபடி ஆக்ரோஷமுடன் மாலை அணிவிக்க வந்தனர். இந்நிலையில் போலீசார் பைக்கை பிடுங்கியதாக கூறி திடீரென இளைஞர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். பின் போலீசார் பைக்கை தருவதாக கூறிய பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.