புத்தகம் படிக்க ஆர்வம் காட்டிய மாணவர்கள்

70பார்த்தது
உலக புத்தக தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட மத்திய நூலகத்தில் இன்று ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் புத்தகம் வாசிக்க திரண்டனர். போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வு தொடர்பான புத்தகங்களை வாசித்தனர். மேலும் கோடை விடுமுறை பயனுள்ளதாக கழிப்பதற்கு மாணவர்கள் பலர் வந்து பொது அறிவு புத்தகங்களை வாசித்து பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நூலக அலுவலர் வயலட் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி