பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. அதில் தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? எத்தனை பேருந்துகளில் பொருத்தப்படாமல் உள்ளன? என்பது குறித்து கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளின் படிக்கட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த உத்தரவிட்டுள்ளது.