நெல்லையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

73பார்த்தது
நெல்லையில் வழக்கறிஞர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டம் வி.எம். சத்திரம் அருகே ஆரோக்கியநாதபுரத்தில் நிலம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் ஒரு கும்பல் அங்கிருந்த வழக்கறிஞர் சரவணராஜை (வயது 32), சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே புளியங்குளத்தை சேர்ந்த சாம் என்னும் மற்றொரு வழக்கறிஞருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் வழக்கறிஞர்கள் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் கீதா, தாசில்தார் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

வழக்கறிஞர் சரவணராஜ் கொலை வழக்கில் அரசியல் பிரமுகர் ஒருவரின் டிரைவர் செல்வம் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி