திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகர் ரயில்வே கேட் இன்று காலை அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை அப்பகுதி வழியே செல்ல முயன்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர். எனவே இவ்வாறு அறிவிப்பில்லாமல் கேட் மூடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.