திருநெல்வேலி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று மேயராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக அவரின் ஆதரவாளர்களுக்கு அறுசுவை உணவு பிரியாணி நேற்று மதியம் வழங்கப்பட்டது. இதில் திமுகவினர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டு உணவை மகிழ்ச்சியுடன் உண்டு மேயர் பதவி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.