முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் 101 நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதில் 32வது நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 11) பாளையங்கோட்டை தெற்கு பஜார் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.