பெண்கள் வேடமிட்டு வந்த திருடர்கள்: சிக்கிய "சுடிதார் கும்பல்"

20135பார்த்தது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண்கள் வேடமிட்டு வந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு வரும் "சுடிதார் கும்பல்" தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் பெண் வேடமிட்டு திருடர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால், எஸ்.ஆர்.நகரில் சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "சுடிதார் கும்பல்" என்று அழைக்கப்படும் இந்த குற்றவாளிகள் சமீபத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைவரிசை காட்டியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மே 18 ஆம் தேதி அதிகாலையில் சுடிதார் அணிந்து இரண்டு ஆசாமிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து, பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி