தேனி மதிப்பீட்டு குழுவினர் ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தனர்
தேனி மதுரை சாலையில் தற்போது கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் ஆய்வு நடத்தினர். தற்பொழுது நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தமிழ்நாடு மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்