தோட்டத்தில் தீ விபத்து

74பார்த்தது
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட திட்டச் சாலை பகுதியில் சாலை ஓரமாக கொட்டப்பட்டிருந்த குப்பையில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். அந்த தீ காற்றின் தாக்கத்தினால் அருகில் இருந்த தோப்பில் பரவியது. இந்தத் தீயினால் தோப்பில் மாடுகளுக்கு தீவனமாக வைக்கப்பட்டிருந்த சீமை புல் முழுவதுமாக பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி