பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் அலுவலகத்தில் சமீபத்தில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் திருடர்கள் நுழைந்து பணம் மற்றும் படத்தின் நெகட்டிவ்களை திருடியது தெரியவந்தது. இந்த திருட்டு தொடர்பாக மும்பை போலீசார் மஜித் ஷேக் மற்றும் முகமது தலேர் பஹ்ரிம் கான் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.