பன்றியை பிடிக்க வைத்த மின் வேலியில் சிக்கி இளைஞர்கள் பலி

82பார்த்தது
பன்றியை பிடிக்க வைத்த மின் வேலியில் சிக்கி இளைஞர்கள் பலி
பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் புது காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தனது கரும்பு தோட்டத்தை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக அனுமதியின்றி, முறைகேடாக மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி(19), சாய்குமார்(23) ஆகிய இரண்டு இளைஞர்கள் மின்வேலியில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் அனுப்பி வைத்த நிலையில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தோட்ட உரிமையாளர் கோவிந்தராஜ் தலைமறைவாகி உள்ளார்.

தொடர்புடைய செய்தி