பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்

67பார்த்தது
பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்
சென்னை சைதாப்பேட்டையிலிருந்து காரணை செல்லும் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏற முற்பட்டபோது பேருந்து நகர்ந்ததால் அவர் கீழே விழுந்துள்ளார். அதுகுறித்து கேள்வி எழுப்பிய இரண்டு பெண்களை ஓட்டுநர் ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒருமையில் அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படும் மாநகரப் பேருந்து ஓட்டுநரை பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி